search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் வியாபாரி"

    • பலத்த காயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அருகே உள்ள காடுவெட்டி, ஆவடி சாலையை சேர்ந்தவர் நந்தகோபால். பால்வியாபாரி. இவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதி ராமலிங்கம் நகரை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் லாரிகளை நிறுத்தி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தேவேந்திரன் அவரது அலுவலக வாசலில் பைக் மீது கால் மீது கால்போட்டு அமர்ந்த படி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த இடத்தின் உரிமையாளர் நந்தகோபால் திடீரென தகராறில் ஈடுபட்டார். நான் வரும்போது மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு செல்போன் பேசுகிறாயே என்று கூறி தேவேந்திரனின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.

    • அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் சுந்தரம் பால் வியாபாரம் செய்து வந்தார்
    • அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் திருவம்பலபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60), பால் வியாபாரி.

    இவர் அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு புன்னார்குளம் பகுதியில் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரம் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுந்தரம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமான அங்கு திரண்டு இருந்தனர்.

    • விருதுநகர் அருகே பால் வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்கோ ட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது52), பால்வியாபாரி. இவருக்கு பூவை மீனாட்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூரில் உள்ள குலதெய்வ ோவிலுக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த ரத்தினகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோ ட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (71). நோய் பாதிப்பு காரணமாக வாழ்க்கையில் விரக்திய டைந்த இவர், சம்பவத்தன்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் மகாரா ஜன்(34). இவர் மதுகுடிக்க அடிக்கடி மனைவி விஜயசுதாவிடம் பணம் கேட்டு வந்தார். இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் மது குடிக்க மகாராஜன் பணம் கேட்டார். ஆனால் மனைவி தர மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த மகாராஜன் வீட்டின் தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • பால் வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருேக உள்ள கரிசல்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    பால் வியாபாரி தற்கொலை

    கடந்த சில வாரங்களாக மகாலிங்கத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்ப ட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த மகாலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.

    உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மகாலிங்கம் பரிதாாமாக இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் சீனிவாச பெருமாள் நகரைச் சேர்ந்தவர் விஜயராமன். இவரது மகன் பாலமுருகன் (வயது 17). இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் ஒரு பூட்டிய வீட்டில் வராண்டாவில் பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×